இந்திய அளவில் என் பிரியத்துக்குரிய பயணக்கட்டுரையாளர்கள் மூவர். முதன்மையானவர் தாகூர். அன்றும் இன்றும் இந்தியமொழிகளின் மகத்தான பயணக்கட்டுரையாளர் அவரே. அவருடைய செல்வ வளம் அவரை தொடர் பயணியாக வாழ வழிவகுத்தது. இமையமலைகளில் ஆப்ரிக்க பழங்குடி நிலங்களில் அரேபிய பாலையில் என அவர் பயணம் செய்துகொண்டே இருந்தார். குறிப்பாக அவருடைய ஆவிக்கப்பல் பயணங்கள் எனக்கு பெரும் கனவென நினைவில் நீடிக்கின்றன. இரண்டாமவர் காகா காலேல்கர். இந்தியாவின் அத்தனை ஆறுகளையும் ஏரிகளையும் நேரில் சென்று பார்த்து அவர் எழுதிய ‘ஜீவன்லீலா’ என்ற நூல் ஒரு பெரும்படைப்பு. மலையாளத்தில் ஞானபீடப் பரிசுபெற்ற எழுத்தாளரான எஸ்.கே.பொற்றேக்காட் எழுதிய பயணக்கட்டுரைகள் எல்லாம் பெரும்புனைவுகளுக்கு நிகராக உளம் கவர்பவை.
1 Matching Annotations
- Feb 2022
-
www.jeyamohan.in www.jeyamohan.in
-