அத்துடன் எங்களூர் கிறிஸ்தவ மேலாதிக்கம் கொண்டது. என் வகுப்பில் தமிழ்சார் ‘சிவனுக்க தலையிலே கிறிஸ்தவன் கால் வைச்சிட்டாண்டா’ என்றார். நான் அழுதுவிட்டேன். என் அம்மாவிடம் கேட்டேன். ‘இனிமே சிவன் என்ன செய்வார்?’ என்றேன். அம்மா ஒரு தயக்கமும் இல்லாமல் ‘அது வேற நிலாடா…ஒரு நிலாவா இருக்கு?’ என்றார். அவ்வளவுதான், முடிந்துவிட்டது. ஆயுர்வேத வைத்தியர் சங்கரன் நாயர் சொன்னார். ‘இந்த பிரபஞ்சத்திலே பலகோடி நிலாக்கள் இருக்கு. அதவிட பலகோடி மாயாநிலாக்கள் உண்டு. சிவன் தலையிலே இருக்கிறது மாயாநிலா… அது க்ஷணத்துக்கு க்ஷணம் மாறிட்டிருக்கும்”
mayanila on sivan head
...even vishnu could not find it when siva sent vishnu and brahma to find who is greatest of the lords